Tuesday, December 18, 2007

ஒலியினைக் குறைபோம் செவியினைக் காப்போம்

பட்டாசு கொளுத்தும் போது தளர்ந்த (தொள தொள) ஆடைகளை அணிய வேண்டாம்.

கடினமான பருத்தி ஆடைகளை உடுத்துவதுடன் இறுக்கமாக இருப்பது நல்லது.

குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் வானவெடிகளையும், ராக்கெட் வெடிகளையும் வெடிப்பதைத் தவிர்க்கவும்.
குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள். பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம்.
கொளுத்திய பட்டாசுகளை ஒருவரை நோக்கிக் காட்டுவதோ, அல்லது தெருவில் எறிவதோ கூடாது.
பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் வெடிகளை வெடிக்கக்கூடாது. மீறி வெடிப்பவர்கள் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படுவார்கள். தவறினால் சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.
முடிந்ததல் பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்; அல்லது குறைத்துக் கொள்ளுங்கள்.
நமது கவனக்குறைவினாலும், அலட்சியத்தினாலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க, இந்த ஆண்டும் பட்டாசினைத் தவிர்த்து அல்லது குறைத்து ‘`மாசற்ற மற்றும் விபத்தில்லாப் பண்டிகையை’’ அனைவருடைய ஒத்துழைப்போடும் கொண்டாடுங்கள்.

No comments: